/

101. நின்று மலர் தூவி  - பாடல் 2

செல்வம் பெருகும்

News image
Updated On :11 ஜனவரி 2019, 5:56 am

பாடல் 2:

    அத்தன் முதுகுன்றை
    பத்தியாகி நீர்
    நித்தம் ஏத்துவீர்க்கு
    உய்த்தல் செல்வமே

விளக்கம்:

அத்தன்=தலைவன்; நித்தம்=தினமும்; உய்த்தல்=செல்வம். இந்த இறைவனை குறித்து செய்யப்படும் வழிபாடு இன்பம் அளிக்கும் என்று முந்திய பாடலில் கூறிய சம்பந்தர், இந்த பாடலில் செல்வம் பெருகும் என்று கூறுகின்றார். செல்வம் என்ற சொல் இம்மையில் பயன் அளிக்கும் பொருட்செல்வம் மற்றும் மறுமையில் பயன்படும் அருட்செல்வம் ஆகிய இரண்டையும் குறிக்கும் என்ற விளக்கம் மிகவும் பொருத்தமானதே. 

பொழிப்புரை:

முதுகுன்றத்தின் தலைவனாக விளங்கும் இறைவன் பால் பக்தி கொண்டு அவனை தினமும் புகழ்ந்து வாழ்த்தி வழிபடும் அடியார்களது செல்வம் பெருகும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.