பாடல் 9:
நெடியான் நீள் தாமரை மேல் அயனும்
நேடிக் காண்கில்லாப்
படியா மேனி உடையான் பவள வரை போல்
திரு மார்பில்
பொடியார் கோலம் உடையான் கடல் சூழ்
புறவம் பதியாக
இடியார் முழவார் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே
விளக்கம்:
நெடியான்=நீண்ட உருவம் கொண்ட திரிவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமால்; பொடி= திருநீறு; படியா மேனி=அளவுக்கு உட்படாத;
பொழிப்புரை:
நெடியவனாகிய திருமாலும் நீண்ட தாமரை மேல் உறையும் பிரமனும் கீழே அகழ்ந்தும் மேலே பறந்தும் காணமுடியாத வண்ணம் எந்த அளவுக்கும் உட்படாத அழல் உருவாகிய திருமேனியை உடையவன் சிவபெருமான். அவன் தனது பவள வண்ணத்தில் உள்ள திருமேனியின் மேல் திருநீறு பூசிய கோலத்தை உடையவன். அவன் தான், கடலால் சூழப்பட்டதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு இருக்கும் பெருமான் இடி போன்று முழங்கும் முழவம் ஒழிக்க நடனம் ஆடும் தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


