பாடல் 2:
வண்டு அணை செய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டு அணை செய் கோலமது கோள் அரவினோடும்
விண்டு அணை செய் மும்மதிலும் வீழ்தர ஒரம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே
விளக்கம்:
கோள்=துன்பம் மற்றும் வலிமை என்று இரு பொருள் கொண்ட சொல். இங்கே வலிமை என்ற பொருள் பொருத்தமாக உள்ளது. கோலம்=அழகு; வார்சடை=நீண்ட சடை; விண்டு= தமது இடத்தை விட்டு நீங்கி; பறக்கும் தன்மையால் ஓரிடத்திலிருந்து நீங்கி எளிதாக மற்றோர் இடத்தை அடைந்து;
பொழிப்புரை:
வண்டுகள் சென்று அடையும் கொன்றை மலர் மாலையினை தனது நீண்ட சடையில் அணிந்தவனும், வலிமை மிகுந்த பாம்பு சென்று அணையும் அழகிய திருமேனியை உடையவனும், தங்களது பறக்கும் தன்மையால் ஓரிடத்திலிருந்து நீங்கி எளிதாக மற்றோர் இடத்தினை அடைந்து ஆங்கே உள்ளவர்க்கு துன்பம் விளைவிக்கும் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழிந்து பொடியாக கீழே விழும் வண்ணம் ஒரே அம்பினை எய்து திரிபுரங்களின் வீழ்ச்சியைக் கண்டவனும் ஆகிய பெருமான் இருப்பது கருப்பறியலூர் தலமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


