பாடல் 4:
புற்றரரவு அணிந்து நீறு மெய் பூசிப் பூதங்கள் சூழ் தர ஊரூர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில்
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினால் அருத்தியால் தெரியும்
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
விளக்கம்:
கருத்தினார்=கருத்தினை உணர்ந்தவர்கள்; பெய்தல்=விடுதல், வார்த்தல், அளித்தல்; புற்றரவு= புற்றில் பதுங்கி வாழும் பாம்பு; பெற்றம்=இடபம்; அருத்தி=அன்பு;
பொழிப்புரை:
புற்றினில் பதுங்கி வாழும் பாம்பினைத் தனது உடலினில் அணிகலனாக அணிந்தும் உடல் முழுதும் திருநீறு பூசியும் பூத கணங்கள் சூழ்ந்து வர பல ஊர்களுக்கு இடபத்தின் மீதேறி, உலகத்தவர் அளிக்கும் பலியினைப் பெற்றுக் கொள்ள திரிபவனும் ஆகிய தலைவன் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; தாங்கள் கற்றுக் கொண்ட நான்கு வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளினை உணர்ந்தவர்களாய் அன்புடன் திகழ்வோரும், அவ்வாறு அறிந்ததால் ஏற்பட்ட புகழினை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!

திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி!
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


