ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 10

விண்ணவர்கள் தொழும்

News image
Updated On :18 ஏப்ரல் 2019, 6:30 pm

பாடல் 10:

    கையினில் உண்பர் கணிகை நோன்ப]ர்
    செய்வன தவமலாச் செதுமதியார்
    பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
    மெய்யவர் அடி தொழ விரும்பினனே
    வியந்தாய் வெள்ளேற்றினை விண்ணவர் தொழு புகலி
    உயர்ந்தார் பெரும் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே

விளக்கம்:

கணிகை=போலித் தனம்; கணிகையரின் சொற்களும் செயல்களும் அடுத்தவரை மயக்கும் நோக்கத்துடன் போலித் தன்மை உடையதாக இருக்கும். அது போன்றே புத்தர்கள் அந்நாளில் செய்த நோன்புகளும் போலித் தனம் உடைத்திருந்தது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். செதுமதி=குற்றமுடைய அறிவு;

பொழிப்புரை:

கையினில் உணவினை ஏந்தி உண்ணும் சமணர்களும் போலித்தன்மை உடைய நோன்பினை செய்யும் புத்தர்களும் செய்வன தவம் என்று கருதப்படுவதில்லை; குற்றம் நிறைந்த அறிவினை உடைய அவர்களது பொய்யான சொற்களை பொருட்படுத்தாத மெய்யறிவினை உடைய அடியார்கள் தனது திருவடிகளை தொழுவதை பெரிதும் விரும்பும் பெருமானே, இடபத்தின் தன்மைகளை அறிந்து வியந்து அதனைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமானே, விண்ணவர்கள் தொழும் வண்ணம் உயர்ந்தவனாக விளங்கும் பெருமானே நீ, புகலி நகரில் இருக்கும் உயர்ந்த திருக்கோயிலில் பிராட்டி உடனாக உறைகின்றாய்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.