பாடல் 6:
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
விளக்கம்:
பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:
பூ சுரர் சேர் பூ தராயவன் பொன் அடி
பூசுரர் சேர் பூ தராய் அவன் பொன் நடி
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி
பூசுரர் சேர் பூந்தராயவன் பொன்னடி
முதல் அடி; பூ=பூமியில் உள்ளவர்கள்; சுரர்கள்=தேவர்கள்; ஆடி=கண்ணாடி என்ற சொல் அடி என்று குறுகியது; பூ=உந்திக்கமலம்; தராயவன்=தரித்தவன்; பொன்=பொலிவு, விளங்கும்; சேர்=தோன்றும்; இரண்டாவது அடி; பூசுரர்=பூமியில் வாழ்ந்த போதிலும், தங்களது மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்புடன் வாழும் தேவர்களாக கருதப்படும் சிவஞானிகள்; சேர்= திரட்சி, கூட்டம்; பூ=பொலிவு; தராய்=பெறப்பட்ட; அவன்=இங்கே கடவுளை குறிக்கும் சொல்லாக கையாளப்பட்டுள்ளது; பொன்=பொன் போன்று வனப்பு மிகுந்த; நடி=நடனம் ஆடுபவன்; மூன்றாவது அடி: பூசு=பூசப்படும் திருநீறு; உரர்=மார்பினை உடையவர்; சேர்பு= அரிந்து, முற்றிலும் நீக்கி; ஊந்தராய்=உந்தித் தள்ளும்; யவன்=யௌவனம் உடைய யுவன் என்ற சொல் யவன் என்று திரிந்தது; அடி=மூலமாக, ஆதாரமாக உள்ள தன்மை; நான்காவது அடி; நிலவுலகில் வாழும் அந்தணர்கள் ஒழுக்கமாக வாழும் நெறியை பின்பற்றுவதால், அவர்களை சிறப்பாக மதித்து நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சொல்வது வழக்கம். சேர்=திரண்டு சென்று சேர்ந்து; பூந்தராயவன்=பூந்தராய் நகரத்தில் உறையும் பெருமான்;
பொழிப்புரை:
பூமியில் வாழும் மனிதர்களையும், மேலுலகில் வாழும் தேவர்களையும் தோற்றுவிக்கும் பிரமனையும், பிரமனைத் தனது உந்திக்கமலத்தில் தோற்றுவித்த திருமாலையும் தனது பிரதிபிம்பமாக தோன்றும் வண்ணம் கண்ணாடியாக நிற்பவன் சிவபெருமான்; மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்பாக கருதப்படும் சிவஞானிகள் கூட்டம், மிகுந்த மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருக்கும் வண்ணம், பொன் போன்று வனப்பு மிகுந்த சிறந்த நடனத்தை ஆடுபவன் சிவபெருமான்; தங்களது மார்பினில் திருநீற்றைப் பூசியவர்களும் தங்களைப் பிணைத்திருந்த பாவம் புண்ணியம் என்ற கட்டினை அறுத்து எறிந்தவர்களும் ஆகிய சிவஞானிகள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பூலோக வாழ்க்கையை உதறித் தள்ளும் தனமையினை அடைவதற்கு ஆதாரமாக விளங்குபவன், எனும் இளமையுடன் விளங்கும் சிவபெருமான் ஆவார்; குற்றமில்லாத மறையவர்கள் திரண்டு சென்று சேர்ந்து வழிபடும் பூந்தராய் தலத்து இறைவனின் பொன்னடிகள் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று அடியேன் விரும்புகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய சா்ஃப்பிங்: சிவராஜ், கமலி மூா்த்திக்கு பட்டம்!

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


