ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

124. வரமதே கொளா - பாடல் 9

அரசனாகிய இராவணனின்

News image
Updated On :25 மார்ச் 2019, 6:30 pm


பாடல் 9:

    பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நன் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
    சண்பை ஆதியைத் தொழும் அவர்களைச் சாதியா வினையே

விளக்கம்:

பண்பு=பெருமை; சண்பை என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ண், பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது  

பொழிப்புரை: 

பெருமைகள் பல உடைய இலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரித்த பெருமான் சண்பை என்று அழைக்கப்படும் நகரத்தில் உறைகின்றான். அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகத் திகழும் இறைவனைத் தொழும் அடியார்களச் சார்ந்துள்ள தீய வினைகள் செயலற்று வலிமை இழந்து காணப்படும். எனவே அத்தகைய வினைகளால் அவர்களுக்கு தன்பம் ஏதும் ஏற்படாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.