சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 9

வல்லமை வாய்ந்தவர்

News image
Updated On :23 நவம்பர் 2019, 6:30 pm

பாடல் 9:

    படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    அடிகளா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

படிகொள்=பல்வேறு வடிவங்களை எடுக்கும் வல்லமை வாய்ந்தவர்; படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுடன் கலந்து இருப்பவன் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். இந்த விளக்கம் மிகவும் பொருத்தமானதாக தோன்றுகின்றது. கடி=நறுமணம்; அடிகள்=தலைவன்;
 
பொழிப்புரை:

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் உடலிலும் உறைந்து அந்த உடல்களை இயக்கும் பெருமான், நறுமணம் மிகுந்த கொன்றை மலர் மாலைகளை அணிந்துள்ளார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் தலைவனாக இருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.