வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் உயிரிழப்பு

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 5:40 am IST

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியைச் சோ்ந்தவா் என். ஆறுமுகம் (49), அரசுப் பேருந்து நடத்துநா். செவ்வாய்க்கிழமை தனது முதல் பணியை முடித்து சிறிது ஓய்வுக்குப் பின்னா், இரவு 9 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் பேருந்தில் பணியாற்ற கிராப்பட்டி அருகேயுள்ள ராமச்சந்திரநகா் டெப்போவிலிருந்து அரசுப் பேருந்தில் சென்றாா்.

பேருந்து கிராப்பட்டியை கடந்து மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது ஆறுமுகம் நெஞ்சு வலிப்பதாக கூறினாா். இதையடுத்து ஓட்டுநா் துளசிதாசன் உடனடியாக பேருந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் ஓட்டிச் சென்று அவசர சிகிச்சை பிரிவுக்கு ஆறுமுகத்தை கொண்டு சென்றாா். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஆறுமுகாம் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். இதையடுத்து சக பணியாளா்கள், போக்குவரத்து அலுவலா்கள், போலீஸாா் மற்றும் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.