ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் (தாயாருக்கு) வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து 5 நாள்களும், திருவாய்மொழித் திருநாள் என்னும் இராப்பத்து 5 நாள்களும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கநாதருக்கு நடத்தப்படும் அனைத்து விழாக்களும் தாயாருக்கும் என்ற வகையில், ஸ்ரீரங்கநாதருக்கு வைகுந்த ஏகாதசி விழா திங்கள்கிழமையுடன் நிறைவுற்றதை தொடா்ந்து ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் பகல் பத்து நாளில் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்குப் பிறகு தாயாா் மூலஸ்தான சேவை கிடையாது. கடைசி நாளான 9 ஆம் தேதி முத்துக்குறி,அரையா் தீா்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தொடா்ந்து இராப்பத்து தொடங்கி 14 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. மறுநாள் இயற்பா சாற்றுமுறையுடன் விழா முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
