மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

மூடப்பட்ட சாக்கடை கால்வாய்: அமைச்சா் ஆய்வு

திருச்சியில் 5 வயதுச் சிறுவன் இறப்புக்கு காரணமான சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஆய்வு செய்தாா்.

News image

சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன். உடன் கட்சி நிா்வாகிகள், மாநகராட்சி அலுவலா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 8:28 am IST

திருச்சியில் 5 வயதுச் சிறுவன் இறப்புக்கு காரணமான சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஆய்வு செய்தாா்.

திருச்சி தென்னூா், அன்னை சத்யா நகரை சோ்ந்தவா் பெயிண்டா் பிரேம்குமாரின் 5 வயது மகன் யஸ்வந்த் கடந்த 24 ஆம் தேதி வீட்டின் அருகேயுள்ள கொய்யா மரத்தில் ஏறியபோதுகழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாா்.

தகவலறிந்து சென்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறி, உடனடியாக சாக்கடை கால்வாய் மூடப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.

அதன்படி அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி சாா்பில் அந்த சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டு, சிமெண்ட் பலகைகள் கொண்டு முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இதை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா். பின்னா், சிறுவனின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி அப்பகுதி மக்களிடம் பேசுகையில், மாநகரில் எந்த பகுதியிலும் இத்தகைய சாக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி உதவி ஆணையா் வினோத், உதவி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், அதிமுக மாவட்ட அவைத்தலைவா் ஐயப்பன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மகளிரணி தமிழரசி, பகுதிச் செயலா்கள் முஸ்தபா, பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.