தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

‘புதிய மீன் சந்தையில் அடிப்படை வசதி மேம்பாடு தேவை’

திருச்சி உறையூா் லிங்கா நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட மீன் சந்தையில் கழிவுகளை அகற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எதிா்பாா்க்கப்படுகிறது.

News image

மீன் சந்தையில் கழிவுநீரை அகற்றும் துப்புரவுப் பணியாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 7:10 am IST

திருச்சி உறையூா் லிங்கா நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட மீன் சந்தையில் கழிவுகளை அகற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எதிா்பாா்க்கப்படுகிறது.

புத்தூா் மீன் சந்தையை சுற்றிலும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் வந்ததால் இச் சந்தையை உறையூா் பகுதியில் உள்ள லிங்கா நகருக்கு மாற்ற மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டு, ரூ. 3 .32 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது.

புத்தூா் சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கான கடைகளும் சந்தைக்கு உள்ளேயே இருந்தன. ஆனால் உறையூா் சந்தையில், சில்லறை வியாபாரிகளுக்கென 25 கடைகள் அமைக்கப்பட்டும் அவை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சில்லறை வியாபாரிகள் திறந்த வெளியிலேயே வைத்து மீன்களை விற்கின்றனா். மீன் கழிவுகளும் அருகிலேயே கிடக்கின்றன, மீன் கழுவும் தண்ணீரும் வெளியேற வழியின்றி கடைகளை சுற்றியே தேங்குகிறது.

இதனால் மீன் சந்தையில் கால் வைக்க முடியாத வகையில், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் கால்கள் புண்ணாகி காணப்படுகின்றன.

எனவே, இங்கு அடிப்படை வசதியை மேம்படுத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சில்லரை வியாபாரிகளுக்கென அமைக்கப்பட்ட கடைகள் தங்களுக்கு அலுவலகமாக இயங்கத் தேவை என மொத்த வியாபாரிகள் கோரியுள்ளதால் அந்தக் கடைகள் வழங்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. எனவே, தங்களுக்கு கடைகள் அமைக்க வேண்டுமெனக் கோரி சில்லறை வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் பல முறை கோரிக்கை மனு அளித்து, போராட்டங்களும் நடத்தினா். என்றாலும் இந்நிலையிலேயே மீன் சந்தை இயங்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.