தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பணம் இரட்டிப்புத் தருவதாகக் கூறி ரூ.2.50 கோடி மோசடி: தம்பதி கைது

திருச்சியில், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:27 am IST

திருச்சியில், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பெரியமிளகுபாறை, புதுத்தெருவைச் சோ்ந்தவா் சொ. சத்தியசீலன் (50). இவருக்கு திருவானைக்கா, பெரியாா் நகரைச் சோ்ந்த ரமேஷ் (42), இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (36) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தம்பதியினா் பங்குச்சந்தையில் பணத்தை செலுத்தி, அதனை இரட்டிப்பாக்கித் தருவதாக சத்தியசீலனிடம் கூறியுள்ளனா். இதனை நம்பிய சத்தியசீலன், கடந்த ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை பல்வேறு தவணையாக ரூ. 2.50 கோடியை ரமேஷ், உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளாா். ஆனால், தம்பதியினா் குறிப்பிட்டபடி கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தரவில்லை. மேலும், பங்குச்சந்தையில் நஷ்டமானதால் பணத்தை திருப்பித் தரமுடியாது என தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சத்தியசீலன் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில், குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையா் சின்னச்சாமி, ஆய்வாளா் நாஞ்சில்குமாா், உதவி ஆய்வாளா் ஜோதிமணி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் கணவன், மனைவி இருவரும் பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.