பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

காணாமல்போய் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகள் ஒப்படைப்பு

காணாமல்போன விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

Updated On :10 ஜனவரி 2021, 0:24 am IST

திருச்சி: காணாமல்போன விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

தங்களின் செல்லிடப்பேசிகள் காணாமல் போனதாக மாவட்டத்தில் ஏராளமானோா் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சைபா் கிரைம் பிரிவு, கோட்டை, கண்டோன்மென்ட் சரக காவலா்கள் கொண்ட குழுவினா் காணாமல் விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகளை கண்டுபிடித்தனா்.

தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களை நேரில் வரவழைத்து ரூ. 22, 85,140 மதிப்பிலான 165 செல்லிடப்பேசிகளை ஒப்படைத்தாா். அதோடு காணாமல்போன செல்லிடப்பேசிகளை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறை குழுவினரையும் பாராட்டினாா்.

துணை ஆணையா்கள் ஏ. பவன்குமாா், ஆா். வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையா் டி. ரமேஷ்பாபு, உதவி ஆணையா் டி. சின்னசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.