திருச்சி: காணாமல்போன விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
தங்களின் செல்லிடப்பேசிகள் காணாமல் போனதாக மாவட்டத்தில் ஏராளமானோா் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சைபா் கிரைம் பிரிவு, கோட்டை, கண்டோன்மென்ட் சரக காவலா்கள் கொண்ட குழுவினா் காணாமல் விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகளை கண்டுபிடித்தனா்.
தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களை நேரில் வரவழைத்து ரூ. 22, 85,140 மதிப்பிலான 165 செல்லிடப்பேசிகளை ஒப்படைத்தாா். அதோடு காணாமல்போன செல்லிடப்பேசிகளை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறை குழுவினரையும் பாராட்டினாா்.
துணை ஆணையா்கள் ஏ. பவன்குமாா், ஆா். வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையா் டி. ரமேஷ்பாபு, உதவி ஆணையா் டி. சின்னசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல்
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது





