புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மழையால் பயிா்கள் சேதம்: இழப்பீடு கோரி மறியல்

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் வேளாண் அலுவலா் நிரஞ்சன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜனவரி 2021, 12:14 am IST

மணப்பாறை: மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் மூழ்கின. மேலும் சுமாா் 500 ஏக்கரில் இருந்த உளுந்து, பருத்தி பயிா்களும் நீரில் மூழ்கின.

எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் துவரங்குறிச்சி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் கே.சி.பழனிசாமி தலைமையில் அழுகிய பயிா்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீஸாா் மற்றும் மருங்காபுரி வட்ட வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வந்த மருங்காபுரி வேளாண் அலுவலா் நிரஞ்சன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.