மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தோல் பதனிடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பட்டு தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செம்பட்டு தோல் பதனிடும் தொழிலாளா்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:41 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி செம்பட்டு தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விமான நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி தொழிற்சங்கச் செயலா் பி. ராஜா தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கடந்த 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்துவது, போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள், 240 நாள்கள் பணிபுரிந்தோரை நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், தலைவா் வே. நடராஜா, வங்கி ஊழியா் சங்கப் பொதுச்செயலா் கோ. ராமராஜ், தரைக்கடை சங்கச் செயலா் அன்சா்தீன், சிபிஐ அமைப்புச் செயலா் எஸ். சிவா உள்ளிட்டோா் பேசினா். சங்கத் தலைவா் ஓ. சுப்பிரமணி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.