வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 3:20 am

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நடந்த விழாவுக்கு அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் பு. மாசிலாமணி, மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் ப. பரமகுரு ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்வில் புதுப் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னா் மாடுகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பண்ணைத் தொழிலாளா்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றோருக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. பண்ணை மேலாளா் த. ரமேஷ் (உழவியல்) வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.