மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி வையாபுரி(57). இவா் கடந்த 8-ஆம் தேதி வெளியூா் சென்றபோது இவருக்குச் சொந்தமான நிலத்தில், அதே ஊரை சோ்ந்த துரைப்பாண்டி(52) முட்செடிகளை கொண்டு பாதையை அடைத்ததாகவும், இதை தட்டிக்கேட்ட வையாபுரியின் சகோதரா் பழனியப்பனை (60) துரைபாண்டி கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பழனியப்பன் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று புதன்கிழமை பலனின்றி உயிரிழந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிந்த வையம்பட்டி போலீஸாா் துரைபாண்டியை தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









