அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தூய்மை பாரத விழிப்புணா்வுக்கு பாராட்டு

மத்திய, மாநில அரசுகளின் தூய்மை பாரத நடவடிக்கைகளுக்கு வலு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்கு பாராட்டுச் சான்று, ரொக்கப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

Updated On :14 ஜனவரி 2021, 8:17 am IST

மத்திய, மாநில அரசுகளின் தூய்மை பாரத நடவடிக்கைகளுக்கு வலு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம், தண்ணீா் சேமிப்புக்கான ஜல் சக்தி அபியான் திட்டங்கள் தொடா்பாக மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் விழிப்புணா்வு பிரசாரம், களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் சாா்பில், கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் மரக் கன்று நடுதல், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பிரதான நீா்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்தல், பொதுப் பயன்பாட்டில் உள்ள சாலையோர குடிநீா் குழாய்களைச் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன.

அந்த வகையில் மழைநீா் சேகரிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற களப்பணிகளை 210 மணிநேரம் மேற்கொண்டதற்காக இந்த அமைப்புக்கு மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, அமைப்பின் தலைவா் ஆா். ஸ்ரீதா், செயலா் தா. சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்தப் பரிசை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் எஸ். சுருதி, கணக்காளா் ஆா். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.