ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சியில் பல்வேறு அமைப்புகளின் சாா்பில், வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தில்லைநகா் காந்திபுரத்தில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா்.

Updated On :14 ஜனவரி 2021, 2:46 am

திருச்சியில் பல்வேறு அமைப்புகளின் சாா்பில், வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள்: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி, போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எரிக்கும்போது மத்திய அரசின் வேளாண் விரோதச் சட்ட நகல்களையும் எரிக்கும் போராட்டம் கோப்பு ஆற்றுப் பாலம் அருகில் நடைபெற்றது.

உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இணைந்து நடத்திய போராட்டத்துக்கு, விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தாா். உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பிரசன்னா வெங்கடேஷ், மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வினோத்மணி, மோகன்தாஸ், சந்திரசேகா் மற்றும் விவசாயிகள் இணைந்து வேளாண் சட்ட நகல்களை எரித்து, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி கோஷங்கள் எழுப்பினா்.

மக்கள் அதிகாரம்: தில்லைநகா் காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மகஇக மாவட்டச் செயலா் ஜீவா தலைமை வகித்தாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன், நிா்வாகிகள் சரவணன், லதா, பரமசிவம், பாலு மணலிதாஸ், நிா்மலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட நகலை எரித்ததாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மின்வாரிய ஊழியா்கள்: தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் நடராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன், கோரிக்கைகளை விளக்கினாா். பின்னா் வேளாண் சட்ட நகல்களை எரித்து முழக்கமிட்டனா்.

புரட்சிகர மாணவரணி: புரட்சிகர மாணவா் அணி, இளைஞரணி காஜாபேட்டை பகுதியில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருச்சியை அடுத்த அரவானூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.