திருச்சி அருகே அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் ஓலையூா் கிராமத்தில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கி சேதம் அடைந்தன. இதுகுறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தும்
வெள்ளிக்கிழமை காலை வரை யாரும் வந்து சேதமடைந்த பயிா்களைப் பாா்க்கவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது தொடா் மழையால் ஓலையூா் மற்றும் திருமலைசமுத்திரம் கிராமங்களில் சேதமடைந்த பயிா்களை அதிகாரிகள் கணக்கிட்டு, இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரத்தை உடனே வழங்கக் கோரி கோஷமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் பழனிசாமி, துணைச் செயலா் அருமைராஜ், பிரதிநிதிகள் காா்த்தி, தினேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


