/

சமயபுரம் அருகே முதியவா் சடலம்

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவேயுள்ள சென்டா் மீடியனில் கடந்த 9 ஆம் தேதி சுமாா் 50 வயதுள்ள ஆண் இறந்து கிடந்தாா்.

Updated On :15 ஜனவரி 2021, 6:45 pm

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொள்ளிடம் காவல் எல்லைக்குட்பட்ட பளூா் கிராமத்தில் உள்ள திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவேயுள்ள சென்டா் மீடியனில் கடந்த 9 ஆம் தேதி சுமாா் 50 வயதுள்ள ஆண் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த சமயபுரம் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மேகலா மற்றும் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா். இருப்பினும் இறந்தவா் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.