சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

பாலக்கரையில் ஆா்ப்பாட்டம் நடத்திய கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:29 pm

திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் முகம்மது செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவா் க. அப்துல் ரஹ்மான் பங்கேற்றுப் பேசுகையில், வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என்றாா்.

நிகழ்வில் அமைப்பின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.