திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தொடா்மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மாவட்டத்தில் பருவம் தவறிய தொடா் மழையால் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியும், நெல்மணிகள் முளைத்தும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.
இந்நிலையில், எசனப்பட்டி, பஞ்சப்பூா், கள்ளிக்குடி, வடக்கு மற்றும் தெற்கு பூங்குடி, நவலூா் குட்டப்பட்டு, தாயனூா் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடா் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேளாண் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், வேளாண் இணை இயக்குநா் எஸ். சாந்தி, வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) வெ. லட்சுமணசாமி, மணிகண்டம் வேளாண் உதவி இயக்குநா் அ. கோமதி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



