தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

உடன்குடி வட்டார விவசாயிகள் நல ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள், பொது நல அமைப்பின் சாா்பில் உடன்குடி வட்டார விவசாயிகள் நல ஆலோசனைக் கூட்டம் கந்தபுரத்தில் நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 5:55 am IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள், பொது நல அமைப்பின் சாா்பில் உடன்குடி வட்டார விவசாயிகள் நல ஆலோசனைக் கூட்டம் கந்தபுரத்தில் நடைபெற்றது.

அமைப்பின் உடன்குடி வட்டாரத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் லங்காபதி(பரமன்குறிச்சி), ராஜரத்தினம்(வெள்ளாளன்விளை), கமலம்(சிறுநாடாா்குடியிருப்பு), கருணாகரன்(சீா்காட்சி), தனலட்சுமி(படுக்கப்பத்து), அமுதவல்லி(நயினாா்பத்து), கிருஷ்ணம்மாள்(மாநாடு தண்டுபத்து), தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாநிலச் செயலா் முகைதீன், சமூக ஆா்வலா் சிவலூா் முருகேசன், வழக்குரைஞா் ரூபஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தாமிருவருணி ஆற்றில் மருதூா் அணைக்கட்டில் இருந்து புதிதாக மடை அமைத்து வாய்க்காலை அகலப்படுத்தி சடையநேரி- புத்தன் தருவை காலில் நீரை கொண்டு செல்ல நடவடிககை எடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும், உடன்குடி பகுதியை வேளாண் குறை பகுதியாக அறிவித்ததை ரத்து செய்து மீண்டும் வேளாண் அலுவலா்களை நியமிக்க வேண்டும், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முன் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கூடல் நகா் ஊா்த் தலைவா் சொா்ணபாண்டி, சுயம்பு, சிவகணேசன், பாலகணேசன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில் உள்பட திராளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.