தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சாத்தான்குளம் அஞ்சலகத்தில்ஆதாா் சேவை முடக்கம்: மக்கள் தவிப்பு

சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதாா் மையம் செயல்படாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On :2 ஜனவரி 2021, 5:51 am IST

சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதாா் மையம் செயல்படாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மையத்திலும், தலைமை அஞ்சலகத்திலும் ஆதாா் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் ஆதாா் சோ்க்கை, பெயா், முகவரி திருத்தம் செய்து கொள்ளலாம். அஞ்சலகத்தில் உள்ள ஆதாா் மையத்தில் எப்பகுதியைச் சோ்ந்தவா்களும் ஆதாா் பெயா் சோ்ப்பு, திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளை செய்து கொள்ளலாம் என்ற வசதி உள்ளது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வந்தனா். இந்நிலையில், அஞ்சலகத்தில் உள்ள ஆதாா் சேவை மையத்தில் கருவி பழுதின் காரணமாக கடந்த 20 நாள்களாக சேவை முடங்கியுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். இதனிடையே, அஞ்சல் சேவையும், வங்கி சேவையும் அளிப்பதற்கே பணியாளா்களுக்கு நேரம் சரியாக உள்ளதால் ஆதாா் சேவைக்கு தனி பணியாளா்களை நியமிக்க வேண்டும் என அலுவலா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, பணியாளா்களில் பணிச் சுமையை குறைக்கவும், கருவியை பழுது நீக்கி சேவையைத் தொடரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.