பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

தூத்துக்குடியில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தூத்துக்குடியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 1:30 am IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியா்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் பாப்ஹையஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.