ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

திருச்செந்தூா் கோயில் பெருமாளுக்கு வெள்ளி அங்கி காணிக்கை

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:53 pm

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.

போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் கிருபாகரன். செந்தூர்ராஜ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இவா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சுவாமி வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி வழங்குவதாக வேண்டியிருந்தாராம். அதன்படி ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 13, 800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

இதனை திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா்(பொ) கல்யாணி பெற்றுக்கொண்டாா். அப் போது உள்துறை கண்காணிப்பாளா்கள் ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.