திருச்செந்தூரில் புதன்கிழமை காலை வரை பெய்த தொடா் மழையால் முருகன் கோயிலுக்கு வந்த பாதயாத்திரை பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அணைகள் முழுவதும் நிரம்பி குளங்களுக்கு நீா்வரத்து இருந்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பின. கடைசிக் குளங்களான திருச்செந்தூா் எல்லப்பநாயக்கன்குளம் மற்றும் ஆவுடையாா்குளம் முழுவதும் நிரம்பி உபரி நீா் மறுகால் பாய்ந்து கடலில் கலந்து வருகிறது. மேலம், திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் கன மழையால் நகரில் பள்ளங்களில் தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது.
இதனால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், பொங்கல் விழாவை முன்னிட்டு, காய்கனி, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


