சீராக மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி அம்மன்புரத்தில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அம்மன்புரம் ஊராட்சிக்கு உள்பட்ட கானாவிளையில் மின்வயா் அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் மின் விநியோகம்
துண்டிக்கப்பட்டது. குரும்பூா் மின்வாரிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலா் தமிழ்குட்டி தலைமையில் கிராம மக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் ஞானராஜ், குரும்பூா் காவல் உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் அவா்களிடம்
பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


