சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பொன்மொழிகள்: சுவாமி கமலாத்மானந்தர்

நீங்கள் கடமையின் நெறியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:27 am


நீங்கள் கடமையின் நெறியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு  முயற்சி செய்யுங்கள்.
-பகவான் புத்தர்

ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜபம், தியானம் முதலியவைகளைச் செய்பவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள். அவர்களை ஆன்மவிளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கக் கூடாது.
- வள்ளலார்

நாம் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அறம் ஒன்றுதான் நம்முடன் மறுவுலகிலும் நல்ல நண்பனாகத் தொடர்ந்து வருகிறது; மற்றவை எல்லாம் சரீரத்தோடு நாசமாகிவிடுகின்றன.
-பஞ்சதந்திரம்

வாழ்க்கையில் அடக்கம், பொறுமை, சத்தியம், குருபக்தி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுபிறவி இல்லாமல் இருப்பதற்கு உரிய நல்ல வழி, இந்தப் பிறவியில் இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்வதுதான்.
-மயான யோகியார்

உனக்கு முக்தியில் விருப்பம் இருக்குமானால், 
புலனின்பத்தை விஷம் போன்று வெகு தூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிடு. திருப்தி, இரக்கம், பொறுமை, நேர்மை, மனஅமைதி, புலனடக்கம் ஆகியவற்றை எப்போதும் பரிவுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
-விவேகசூடாமணி

சாஸ்திரங்களில் இருக்கும் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்; பெரியோர்களின் கொடுஞ்சொற்கள் நல்வாழ்வை அளிக்கும். அரசனின் கொடிய சொற்களோ போராட்டத்தை வளர்க்கும்.
-கெளடில்யர்

பெருந்தன்மை உடையவர்கள், மிகவும் நல்ல புகழ் படைத்தவர்கள், தர்மத்தில் பற்றுடையவர்கள், நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் ஆகியவர்கள் உலகில் பூஜிக்கத்தக்கவர்கள். உள்ளத்தில் அன்பு பெருக்கற்றவன்  நீரற்ற மேகத்திற்கும், பழமற்ற மரத்திற்கும், பாலற்ற பசுவுக்கும் சமமானவன்.
-ராமாயணம்

நமக்கு மிகவும் பிரியமான விஷ்ணு திருத்தலம் 
திருநாராணபுரத்தில் ஒரு கூரைவீடாகிலும் கட்டிக்கொண்டு அதில் வாசம் செய்யுங்கள். அது முடியாத பட்சத்தில், அர்த்தத்துடன் த்வயமந்திரத்தை ஜபம் செய்தபடியே நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்.
-ஸ்ரீ ராமானுஜர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.