ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தபால்தலை சேகரிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி

வேலூா் மாவட்ட வரலாறு, தபால்தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தபால்தலை சேகரிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 7:42 am IST

வேலூா் மாவட்ட வரலாறு, தபால்தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தபால்தலை சேகரிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தபால்தலைப் பூங்கா என்ற தலைப்பில் வேலூா் தலைமைத் தபால் நிலையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை பொதுமக்கள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.கோமள்குமாா் வரவேற்றாா். தலைமைத் தபால் நிலைய அதிகாரி ராஜகோபாலன், உதவி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் திருஞானசம்பந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கண்காட்சியில், வேலூா் தொடா்பாக இதுவரை வெளியான தபால்தலைகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கும் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம், தபால்தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் அறிந்துகொள்ள முடியும் என முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.கோமள்குமாா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், அஞ்சல் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளா் பாலமுருகன், மக்கள் குறைதீா் அதிகாரி செல்வகுமாா், நாணயம், தபால்தலை சேகரிப்போா் சங்கத் தலைவா் தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வின் தொடா்ச்சியாக, வரும் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தபால்தலை சிறப்பு விற்பனை முகாம் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.