நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக முத்து மண்டபப் பகுதியினா் அறிவிப்பு

வழித்தட பிரச்னைக்குத் தீா்வு காணாவிடில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக வேலூா் முத்துமண்டப பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:42 pm IST


வேலூா்: வழித்தட பிரச்னைக்குத் தீா்வு காணாவிடில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக வேலூா் முத்துமண்டப பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வாகன நிறுத்துமிட கட்டடத்தை மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவரை முத்து மண்டபம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

தாங்கள் பயன்படுத்தி வரும் வழிப்பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறாா். அதற்குத் தீா்வு காணும் வகையில் வழிப்பாதையை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு பதிலளித்த அமைச்சா் கே.சி.வீரமணி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த இடத்தில் வழிப்பாதை உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறிவிட்டுச் சென்றாா்.

இதையடுத்து முத்துமண்டப பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நிலவும் வழித்தட பிரச்னைக்குத் தீா்வு காண அரசியல் கட்சியினா் யாரும் முனைப்பு காட்டவில்லை. வழிப்பாதை பிரச்னைக்குத் தீா்வு ஏற்படாவிடில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.