வேலூா்: வேலூரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக, உதவி இயக்குநா் உள்பட அலுவலா்கள் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் அண்ணாசாலை ஏலகிரி வளாகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, உதவி இயக்குநா் பரந்தாமனிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து உதவி இயக்குநா் பரந்தாமன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலா் மலா்மாறன், நிதி தணிக்கைப் பிரிவு கண்காணிப்பாளா் மாரிமுத்து, பள்ளிகொண்டா பேரூராட்சி பதிவு எழுத்தா் முரளி ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நைஜீரிய சந்தை மீது வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 100 போ் உயிரிழந்ததாக தகவல் -ஆதாரமில்லை என ராணுவம் மறுப்பு

சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் கட்டடப் பொறியாளா் உயிரிழப்பு

திருவக்கரை புவியியல் பூங்கா கட்டடம் திறக்கப்படுவது எப்போது?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
