எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வேலூரில் ரூ. 11 கோடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:48 pm IST


வேலூா்: வேலூரில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்படும் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கான பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி உத்தரவிட்டாா்.

சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ. 11 கோடி மதிப்பில் 6,662 சதுரடியில் 42 காா்கள், 1,059 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் மூன்றடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளதை அடுத்து, அதனை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டுமானப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க மாநகராட்சி பொறியாளா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் அறிவுறுத்தினாா்.

மேலும், சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், புதை சாக்கடைப் பணிகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விரைந்து முடிக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையா் சங்கரன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே. அப்பு, மாநகராட்சி செயற்பொறியாளா் சீனிவாசன், அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.