பொங்கல் பண்டிகையையொட்டி சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டித் தெருவில் மளிகை, எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான பொருள்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மண்டித் தெருவில் அதிக அளவில் நிற்பதால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
அதேசமயம், வேலூா் மாநகராட்சியில் சீா்மிகு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் மண்டித்தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களின் துண்டுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. இதன் காரணமாகவும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க, மரத் துண்டுகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கிரேட்டா் நொய்டாவில் இருவா் சடலமாக மீட்பு
சிவப்புப் பந்து போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்: அஸ்வின்

பிளஸ் 2 தோ்வு: ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
