திருவலம் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், திருவலம் அருகே குகையநெல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (43). திருவலம் மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாகப் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
அவா் மேல்மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனம் எதிரே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் வியாழக்கிழமை மதியம் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அந்த இருவர் யார்?

ஸ்விக்கி 4வது காலாண்டு இழப்பு ரூ. 800 கோடியாக குறைவு!

அஸ்ஸாமின் புதிய பாஜக முதல்வர் யார்? மே 10-ல் தேர்வு!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
