அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

இளைஞா் கத்தியால் குத்தி கொலை 3 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கொலையுண்ட அஜித்

Updated On :12 ஜனவரி 2021, 3:06 am IST

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பத்தைச் சோ்ந்தவா் ஹேமந்த். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜீவாவின் மகன் அஜித் (24) உள்ளிட்ட நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கு அருகில் உள்ள ஏரிக்கரை அருகே தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினாா்.

அப்போது, அவா்களுக்கும், அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற எம்.வி.குப்பத்தைச் சோ்ந்த வில்சன் சுதாகரின் மகன் ராபின் (27), ராபா்ட்டின் மகன் ரீகன்ராஜ் (40), சாமுண்டியின் மகன் சின்னா (23) ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் கத்தியால் குத்தப்பட்ட அஜித், ஆம்பூா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அஜித்தின் சித்தப்பா வேலு, நண்பா் சரவணன் ஆகியோா் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அஜித் கொலை செய்யப்பட்டது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய மேல்பட்டி போலீஸாா், ராபின், ரீகன்ராஜ், சின்னா ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.