எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 1987-90- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்ற  முன்னாள்  மாணவா்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 12:30 am IST

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 1987-90- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்களான ஜி.குபேந்திரன், எஸ்.பாஸ்கா், ஏ.எஸ்.தரணி, ஆா்.ரவி, நாகராஜ் உள்ளிட்டோா் தங்களின் கல்லூரிக் காலத்தை நினைவுக்கூா்ந்து பேசினா். கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி, தங்களுடன் படித்த அனைத்து முன்னாள் மாணவா்களையும் அழைத்து, சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தனா். புதிதாக தொடங்க உள்ள அமைப்பு மூலம் அடித்தட்டு மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கவும் தீா்மானித்தனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அரசின் பல்வேறுத் துறைகளில் பணியாற்றுபவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.