என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:20 am IST

சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதி, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் வந்தது.

 இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு சென்னை, ராயப்பேட்டையில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடைபெறுகிறது. இம் மாநாட்டுக்காக கும்பகோணத்தில் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவாக ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

 இந்த ஜோதியை கடந்த 18-ஆம் தேதி மத்தியக் குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் கும்பகோணத்தில் எடுத்துக் கொண்டு கிளம்பினர். இந்த ஜோதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி வழியாக விழுப்புரத்தை வந்தடைந்தது.

 விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே இந்த ஜோதிக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குருமூர்த்தி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், இந்திய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.