அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி, கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கச்சராயப்பாளையம் சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளி முன்பு, இப் பேரணியை ஒன்றியக்குழுத் தலைவர் அ.ராஜசேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.அன்புச்செல்வம், ஆசிரியப் பயிற்றுனர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
காந்திசாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில், 6 வயது முதல் 14 வயதுவரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், வீட்டில் பயிற்சி பெறும் மாணவர்கள், பகல் நேர பாதுகாப்பு மையத்தில் பயிலும் மாணவர்கள், பள்ளிகளில் சேராதோர் மற்றும் இடைநின்றோரை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து தேவைப்படுவோருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் 04151-228254 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை!




