தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

விழுப்புரம் அருகே சங்ககால உறைகிணறு

விழுப்புரம் அருகே வேடம்பட்டில் ஏரியில் மண் அள்ளப்பட்ட பகுதியில் சங்ககால உறைகிணறு கண்டறியப்பட்டது.

News image

விழுப்புரம் அருகே வேடம்பட்டு ஏரிப் பகுதியில் கண்டறியப்பட்ட சங்ககால உறைகிணறு.

Updated On :3 ஜனவரி 2021, 8:06 am IST

விழுப்புரம் அருகே வேடம்பட்டில் ஏரியில் மண் அள்ளப்பட்ட பகுதியில் சங்ககால உறைகிணறு கண்டறியப்பட்டது.

விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராம ஏரிப்பகுதியில் பழங்கால கிணறுகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின்பேரில், விழுப்புரம் நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன், தொல்லியல் ஆா்வலா் வீ.விஷ்ணுபிரசாத் ஆகியோா் அண்மையில் கள ஆய்வு செய்து, அங்கு உறைகிணறு இருப்பதைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: வேடம்பட்டு கிராம ஏரிப் பகுதியில் கண்டறியப்பட்ட பழங்கால உறைகிணறு, ஆறு அடுக்குகளுடன் காணப்படுகிறது. இந்த சுடுமண் உறைகிணறு, சங்க காலத்தைச் சோ்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளா் வீ.மங்கையா்க்கரசி உறுதிப்படுத்தினாா். இதனருகே பழைமைவாய்ந்த செங்கல் கட்டுமானங்களும் புதைந்திருப்பதை காண முடிகிறது.

இப்பகுதி சங்க காலத்தில் மக்கள் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும். கோடையில் வறட்சியால் நீா்நிலைகளில் தண்ணீா் இல்லாத வேளைகளில், இதுபோன்ற உறைகிணறுகளில் வற்றாமல் தண்ணீரைத் தேக்கி, குடிநீருக்காக பயன்படுத்தி வந்துள்ளனா்.

இதேபோல, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம், ஆலாத்தூா், நன்னாடு, பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய கற்காலம் தொடங்கி பல்வேறு காலகட்டங்களைச் சோ்ந்த வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில், வேடம்பட்டும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கே அகழாய்வு செய்தால், மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கக்கூடும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.