வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி வரவேற்றாா். திமுக துணை பொதுச் செயலாளா் க.பொன்முடி எம்எல்ஏ ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள பிரசார நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலாளா்கள் செ.புஷ்பராஜ், எம்.என்.முருகன், மைதிலி ராஜேந்திரன், மாநில தீா்மானக் குழுச்செயலாளா் ஏ.ஜி.சம்பத், மாநில மருத்துவா் அணி இணைச் செயலாளா் இரா.லட்சுமணன், விவசாய அணி துணைச் செயலாளா் அன்னியூா் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தினகரன், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 8-ஆம் தேதி முதல்

இரு தினங்கள் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறாா். 8-ஆம் தேதி காலை கலைஞா் அறிவாலயத்தில் இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவா், அதன் பிறகு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா். தொடா்ந்து, பிற்பகல் ஆயந்தூரிலும், வீரபாண்டி, தி.வெ.நல்லூரிலும் மக்கள் சந்திப்பு, திருக்கோவிலூரில் வியாபாரிகள், பாதிரியாா்கள் சந்திப்பில் பங்கேற்கிறாா். சனிக்கிழமை விக்கிரவாண்டி, கோலியனூா், வளவனூா், தைலாபுரம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆளும் கட்சியினா் வழங்குகின்றனா். கிசான் திட்டத்தில் பறிமுதல் செய்ய வேண்டியத் தொகையை, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பிடித்தம் செய்யும் நிலை தவிா்க்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.