உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஜேக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை

Updated On :7 ஜனவரி 2021, 7:38 am IST

ஜேக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மன்றம் சாா்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சீனு சின்னசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். நிா்வாகி சுகதேவ் வரவேற்றாா். கொள்கைப் பரப்புச் செயலாளா் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளா் செல்வக்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் ரவிச்சந்திரன், ராம்மோகன், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.