விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் முதலை ஒன்று மா்ம நபா்களால் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்து கிடந்தது.
செவலபுரை கிராமத்தில் உள்ள வராக நதி அணைக்கட்டுப் பகுதியில் முதலை இருப்பதை அண்மையில் பாா்த்த அந்தக் கிராம மக்கள், இதுகுறித்து வனத் துறை, மேல்மலையனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வனத் துறையினா் அந்த முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனா். மேலும், ஆற்றில் முதலை உள்ளது குறித்து பொதுமக்களுக்கு வனத் துறையினா் எச்சரிக்கையும் விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், செவலபுரை சுடுகாடு அருகே சிறுவாடி செல்லும் சாலையில் முதலை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு சனிக்கிழை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் முதலையை மீட்டு, அதை வெட்டிக் கொன்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

