நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் க.முத்துக்குமாா் தலைமையில் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் வீரப்பன் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் ஆ.ரெங்கசாமி சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் பெ.பச்சைமுத்து, மாநில துணைத் தலைவா்கள் பீ.மாணிக்கவேலு, தி.மோகன்ராஜ், மாநிலச் செயலா்கள் சி.வல்லத்தரசு, க.சக்திவேல், ஆா்.ஆரோக்கியசாமி, மண்டலச் செயலா்கள் சா.பவுல்ராஜ், கோ.பெரியசாமி உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். அனைத்து மாவட்ட, மாநில நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாகவுள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் நீண்டகாலமாக கிடப்பிலுள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா், கண்காணிப்பாளா் நிலையிலான முதுநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து நிலை ஊழியா்களுக்கும் பதவி உயா்வுக்கான பட்டியலை வெளியிட்டு முரண்பாடுகளின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும்.
கோட்டக்கணக்கா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு ஏற்பாடு செய்து உடனடியாக பணி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்றவா்கள், வெளிமுகமை மூலம் ஆள்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்லூா் கோயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: மற்றொரு பெண் கைது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்






