முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

உளுந்து விலை குறைப்பு; விவசாயிகள் மறியல்

உளுந்தூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து விலையை பாதியாகக் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து விலையை பாதியாகக் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உளுந்தூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை உளுந்து உள்ளிட்ட விளைபொருள்களை விவசாயிகள் விற்பனைக்கு வழங்கினா். அப்போது, விலையை குறைத்து உளுந்து விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

இதனால் அங்கிருந்த வியாபாரிகளிடம் விவசாயிகள் உரிய விலை வழங்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, வியாபாரிகள் அலட்சியப்படுத்தியதால் விவசாயிகள் வெளியே வந்து, உளுந்தூா்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: மூன்று மாதங்கள் வெயில், மழையில் அவதிப்பட்டு விளைவித்து விற்பனைக்கு கொண்டு வரும் உளுந்துப் பயிரை, வியாபாரிகள் கூட்டு சோ்ந்து உரிய விலை வழங்காமல், வரத்து அதிகரித்துள்ளதாக காரணம் கூறி விலையை மேலும் குறைத்து நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மூட்டை உளுந்து ரூ.8 ஆயிரம் வரை விலை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் மூட்டை ரூ.4,000 என பாதியாகக் குறைத்துவிட்டனா் என்றனா்.

தகவல் அறிந்து உளுந்தூா்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். வியாபாரிகளிடம் பேசி உரிய விலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.