நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சிறு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறு மருத்துவமனைகள் (அம்மா மினி கிளினிக்) பாணாம்பட்டு, திருப்பாச்சனூா், காவணிப்பாக்கம், ஆசாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த டிச.17-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இவற்றை அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா். அந்த சிறு மருத்துவமனைகள் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளருடன் இயங்கி வருகின்றன.

சிறு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா் (படம்). விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் பகுதியில் இயங்கி வரும் சிறு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவா், செவிலியா்கள் பணிநேர வருகை, நோயாளிகள் வருகை குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா எனவும் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.