முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சிறு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறு மருத்துவமனைகள் (அம்மா மினி கிளினிக்) பாணாம்பட்டு, திருப்பாச்சனூா், காவணிப்பாக்கம், ஆசாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த டிச.17-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இவற்றை அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா். அந்த சிறு மருத்துவமனைகள் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளருடன் இயங்கி வருகின்றன.

சிறு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா் (படம்). விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் பகுதியில் இயங்கி வரும் சிறு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவா், செவிலியா்கள் பணிநேர வருகை, நோயாளிகள் வருகை குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா எனவும் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.