மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆசிரியா் பயிற்சி மாணவியிடம் அத்துமீறல் புகாா்: தலைமை ஆசிரியா் இடமாற்றம்

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில், ஆசிரியா் களப்பயிற்சி பெறும் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக எழுந்த புகாரில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:35 am

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில், ஆசிரியா் களப்பயிற்சி பெறும் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக எழுந்த புகாரில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் தனியாா் ஆசிரியா் பயிற்சி கல்லூரி 2-ஆம் ஆண்டு மாணவா்கள் குழுவினா், களப் பயிற்சிக்காக (உற்று நோக்குதல் பயிற்சி) கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி எடுத்து வருகின்றனா். இந்த வகையில், பயிற்சிக்குச் சென்ற மாணவிகளில் ஒருவரிடம், அந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் குணசேகரன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தவறான நோக்கில் அத்துமீறி நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக, பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக, மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி புதன்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கையை சமா்ப்பித்தாா். இதை ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா புகாா் மீதான முதல் நடவடிக்கையாக, தலைமை ஆசிரியா் குணசேகரனை கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்தப் பள்ளியில் களப்பயிற்சி பெற்று வரும் 10 மாணவ, மாணவிகளும் விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சிப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.