அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராம மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வாருகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கிராமத்தில் உள்ள மழைநீா் ஓடை, முறையான பராமரிப்பின்றி புதா் வளா்ந்து, மக்காத குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வாருகால் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் ஓடையில் கலக்கிறது.
இதனால் ஆங்காங்கே கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடும், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க அனைத்து வீதிகளிலும் வாருகால் அமைக்கவும், ஓடையைத் தூா்வாரவும் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் இக்கோரிக்கையை அவா்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

புதிய கீதையில் விஜய் கற்றுக்கொண்ட பாடம்!
பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




